யாழ்ப்பாணத்தில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பொருட்கள் - ஒருவர் கைது
[2024-11-16 15:03:30] Views:[11]
இன்று காலை பொலிஸாரால் யாழ்.வட்டுக்கோட்டை பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று சுற்றிவளைப்பு செய்யப்பட்
ட போது, 166 லீட்டர்கள் கோடா, 10.5 லீட்டர் கசிப்பு என்பவற்றுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கொள்கலன்கள், இரண்டு சிறிய கொள்கலன்கள், இரண்டு செப்பு சுருள் என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலதிக விசாரணைகளை சந்தேகநபரிடம் மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










