திடீர் சுற்றிவளைப்பு.; பங்களாதேஷ் பிரஜைகள் கைது.!
[2024-10-30 11:31:20] Views:[9]
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்கள் சீதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டவர்கள் குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.










