மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதிக்குத் வெடி குண்டு அச்சுறுத்தல்.!
[2024-10-25 12:19:47] Views:[9]
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கிடைக்கப் பெற்ற கடிதத்தையடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை ஏற்ப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டதுடன், அப்பகுதிக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறிப்பிடுகையில்,
குறித்த கடிதம் இனந்தெரியாதோரினால் போலி முகவரி ஒன்றிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் வேறு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
அங்கு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதியின் வழமையான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும், குறித்த கடிதம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.










