இனந்தெரியாத இரு சடலங்கள் மீட்பு !
[2024-10-22 20:47:44] Views:[12]
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இனந்தெரியாத சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கராஜ மாவத்தையில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலமும், பேராதனை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










