விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ; உர மானியம் வங்கிக் கணக்குகளுக்கு !
[2024-10-22 20:22:58] Views:[11]
உர மானியத்துக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு விவசாயின் வங்கிக் கணக்கில் 15,000 ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரையில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் 60 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை வழங்கும் பணிகள் கடந்த 14.10.2024 திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக 15,000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் தற்போது 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இவ்வாறு 15.000 ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










