யாழில் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார் !
[2024-10-22 15:48:07] Views:[13]
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காட்டுக்குள் அநாதரவாக நிருத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை பகுதியில் பற்றைக்காடொன்றினுல் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்ட போது, அது போலியானது எனவும், அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










