போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது !
[2024-10-20 11:23:57] Views:[13]
அக்கரைப்பற்று பகுதியில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கறைப்பற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பாலமுனை பிரதேசத்தில் முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, காரில் பயணித்த பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த 34, 43 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை நேற்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 22 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










