யாழில் கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் உயிரிழப்பு!
[2024-09-29 10:39:40] Views:[14]
யாழில், கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
5 பேர் கணவாய் பிடிப்பதற்கு சென்றிருந்த போது குறித்த நபர் திடீரென மயக்கமடைந்தநிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.










