யாழில் வாக்குச்சாவடியில் பதற்றம்; வாக்குசீட்டை கிழித்த இளைஞன் கைது!!
[2024-09-21 15:55:37] Views:[12]
யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயத்தில் வாக்களிக்கச் சென்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்திய குறித்த இளைஞன் வாக்குச்சீட்டினை கைகளில் பெற்று வாக்களிக்காமல் அதனை கிழித்துள்ளார்.
இதை அவதானித்த அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, குறித்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.










