யாழில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!
[2024-09-21 11:50:30] Views:[12]
யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) இரவு நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பரமயோக ஜயம் சரஸ்வதி (71 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சமயல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.










