பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்குப் பெட்டிகள்..!!
[2024-09-20 15:53:08] Views:[15]
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நாளையதினம் (21) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் யாழில் 511 வாக்களிப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்களிப்பு நிலையங்களும் என மொத்தமாக 619 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இன்றையதினம் காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, யாழ் மாவட்டத்தில் வாக்கெண்ணும் மையமாக செயற்படவுள்ள யாழ் மத்திய கல்லூரியை சூழவுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க வியமாகும்.










