தேர்தலை முன்னிட்டு விசேட பேருந்து சேவை.!!
[2024-09-20 15:10:43] Views:[9]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக இ.போ.ச பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அன்றைய தினம் மேலதிக தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் பேருந்து ஊழியர்களும் வாக்களிக்க செல்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.










