மனைவியின் தகாத செயல் கையை இரண்டாக வெட்டிய கணவன்!
[2024-09-20 10:33:53] Views:[10]
தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, சந்தேகநபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று கணவனின் எச்சரிக்கைகளையும் மீறி மனைவி வீட்டின் அறைக்குள் இரகசியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த போது அதனை அவதானித்த கணவன் மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த 41 வயதுடைய பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான கணவன் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கையை இழந்தவர் என்றும் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










