காங்கேசன்துறையில் நவீன சீமெந்து தொழிற்சாலை.!
[2024-09-19 11:03:28] Views:[10]
இந்திய முதலீட்டில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று (18) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் ஏ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, இந்திய முதலீட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.
நிர்மானிக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.










