யாழ். வல்லிபுர ஆலய சமுத்திரத் தீர்த்தத்தின் போது ஒருவர் பலி மற்றுமொருவர் மாயம்..!!
[2024-09-18 15:34:40] Views:[10]
யாழ்ப்பாணம், வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவின் போது கடலில் நீராடிய பக்தர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று (17) மாலை வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்றது.
இச்சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு, அம்பன் - குடத்தனையைச் சேர்ந்த 54 வயதுடைய கந்தசாமி வினோகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










