யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் கள ஆய்வு!
[2024-09-17 12:22:01] Views:[9]
யாழ்ப்பாணம் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தின் ஒழுங்கமைப்பு, பாதுகாப்பு, பொது வசதிகள் மற்றும் நலனோன்பு வசதிகள் தொடர்பாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் அங்கு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கள ஆய்வு செய்யப்பட்டது.
இக் கள ஆய்வின் போது மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் போது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் காவல்துறைமா அதிபர் திரு ஏ. ஜே. காலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாட்சி அலுவலர்கள்
பங்குபற்றினார்கள்.










