யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழா இன்று ஆரம்பம்;
[2024-09-16 12:25:33] Views:[11]
புகழ் பெற்ற யாழ்ப்பாணம், வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வசந்த மண்டபப் பூஜை இன்று திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கும், தேர்த்திருவிழா காலை 9:00 மணிக்கும் ஆரம்பமாகியதுன.
சமுத்திர தீர்த்தத் திருவிழா நாளையதினம் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்கு கற்கோவளம் வங்கக் கடலில் இடம்பெறும். இதற்கான வசந்த மண்டபப் பூஜை மாலை 4;00 மணிக்கு இடம்பெற்று தீர்த்தமாடுவதற்குச் சுவாமி 5;00 மணிக்கு வங்கக்கடல் நோக்கி புறப்படுவார்.
மறுநாள் புதன்கிழமை காலை 10:00 மணிக்கு ஆலய வளாகத்திலுள்ள கேணியில் பட்டுத் தீர்த்தம் நடைபெறும். இறுதியாக அன்றைய தினம் மாலை 5:00 மணிக்குக் கொடியிறக்கம் இடம்பெறுவதுடன் மஹோற்சவம் நிறைவுறும் என தெரிவிக்கப்படுகிறது.










