கேம் விளையாட தந்தை கைபேசி கொடுக்காததால் உயிரை மாய்த்துக் கொண்ட 13 வயது சிறுவன்...!!
[2024-09-16 12:05:41] Views:[10]
கேம் விளையாடுவதற்கு தந்தை கைபேசியை கொடுக்காத காணத்தால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று நேற்று (15) யாழில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், அந்தோனியார் சேர்ச் வீதி, பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மேர்வின் டயஸ் சிந்துஜன் என்ற 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கேம் விளையாட கைபேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளான் என தெரியவந்துள்ளது.










