yarlathirady.com

புலம்பெயர் அமைப்புகளின் மோதல்களும் தாயக தமிழர் எதிர்காலமும்.!!

[2024-09-12 10:25:22] Views:[22]

புலம்பெயர் தமிழ் அமைப்பொன்றின் கிளையில் அண்மைக்காலமாகவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. குறித்த அமைப்பின் பொறுப்பாளர் யார் என்பதில் உள்ள போட்டித் தன்மையும் நிதியினை பகிர்வதில் உள்ள சிக்கலுமே மோதலுக்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எமது ஈழ மக்கள் பெயரை வைத்து பணம் சேகரித்து ஈழத்தமிழர்களுக்கான அமைப்புகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறு பதவிக்காகவும் பணத்திற்காகவும் வீதியில் இறங்கி சண்டை பிடித்துக் கொள்வது எந்த அளவிற்கு வெட்கக்கேடான செயல்? இவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகதான் தாயக தமிழர் விவகாரத்தை அங்கு கையாளுகின்றனர்.

உண்மையை சொல்லவேண்டுமெனில் ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பெரும்பாலும் நமது ஈழத் தமிழ் மக்களுக்கென உண்மையாகவோ உணர்வு ரீதியாகவோ இயங்கவில்லை. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டுமே இயங்கு கின்றமை இச்சம்பவத்தில் இருந்து தெள்ளத் தெளிவாகின்றது.

எங்கேயோ இருந்து கொண்டு போலியாக பேசிக்கொண்டு போலியாக கண்ணீர் வடித்துக் கொண்டு தாயகம், தமிழீழம், தலைவர் என வெறுமனே உதட்டளவில் பேசி தமிழ் மக்களை தங்கள் வசப்படுத்தலாம் என நினைக்கிறார்கள் போலும். தலைவரின் சிந்தனையை உண்மையில் ஏற்று நடப்பவர்களாக இருப்பின் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டிருப்பார்களா?

இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாக ஈழத் தமிழர் அடையாளத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தவறாக பயன்படுத்துவது எமது கண்கூடாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. புலம்பெயர் அமைப்புகளும் சரி எமது தமிழ் அரசியல்வாதிகளும் சரி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. தமிழ் மக்களின் எதிர்காலத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் தான் இவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. பணம், பதவி மற்றும் சுயநலம் என்பவற்றை நோக்காகக் கொண்டே இவர்கள் செயல்படுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகின்றது.

இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இவர்களின் சுயரூபத்தை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இவர்களை நம்பி எமது காலத்தை வீணடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இனியும் போலியாக செயற்படும் அரசியல்வாதிகளாகட்டும் அல்லது புலம்பெயர் அமைப்புகளாகட்டும் இவர் எவர் ஒருவருக்குமே நாம் தலை சாய்க்காது நமது உரிமைகளை நாமே வென்றெடுப்போம்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.