கொடூரமாக மகனை வெட்டிக் கொன்ற தந்தை.!
[2024-09-12 09:37:36] Views:[18]
கொழும்பு, இரத்மலானை பகுதியில் தந்தையொருவர் உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொலை செய்ததுடன், மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பு, இரத்மலானை, மாளிகாவ வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 26 வயதுடைய லஹிரு லக்ஷான் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய கொலையாளியின் மனைவி பலத்த வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று வீட்டின் அருகாமையில் மறைந்திருந்து இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்து மகனையும் மனைவியையும் கொடூரமாக வெட்டிய பின்னர் தப்பியோடியுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அயலவர்கள் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், எனினும் மகன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










