யாழில் இளைஞனை கடத்திய குழு.! ஒருவர் கைது;
[2024-09-11 13:14:54] Views:[10]
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்று இளைஞர் ஒருவரை கடத்தி சென்று பணம் மற்றும் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞனை முச்சக்கர வண்டி ஒன்றில் மூவர் கடத்தி சென்று தாக்குதல் நடாத்தி அவரிடம் இருந்து 10ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளிச் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனைய இருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










