அனுரவால் திருடர்களை சிறையிட முடியும் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது..! விக்கி சுட்டிக்காட்டு;
[2024-09-04 12:29:44] Views:[11]
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் திருடியவர்களை பிடித்து சிறையில் அடைக்களாம் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் மற்றும் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம்.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.
நாட்டின் பொருளாதாரரீதியாக கட்டி எழுப்ப அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன் பொறிக்குகள் சிக்கியுள்ளமையினால் நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மேலும் தேசிய மக்கள் சக்தியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் நிலையில் அவர்கள் ஆட்சி வருவார்களானால் இலங்கை தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆரம்ப கால நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதனால் அநுரவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.










