இராணுவ தளபதியினால் யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீடு..!
[2024-08-31 13:29:55] Views:[9]
இலங்கை இராணுவம் யாழ். குடாநாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பொதுமக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் 2024.08.24 திகதி யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் யாழ்ப்பாணம், ஈவினை பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் சுகன்யா என்பவரது குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை கையளித்தார்.
குறித்த வீட்டினை திரு. சுமி சின்னய்யா குடும்பத்தினர் மற்றும் Wanni Aid Canada என்ற நிறுவனத்தின் நிதி உதவில், 15 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினர் தங்களது மனிதவளம் மூலம் நிர்மாணித்திருந்தனர்.
இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயவர்தன, 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் மென்டிஸ், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.










