கடற்படையினரால் மீட்கப்பட்ட மீனவர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.!
[2024-08-30 11:45:22] Views:[9]
இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இருவரும் நேற்று (29) விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த திங்கட்கிழமை (26) ராமேசுவரத்திலிருந்து கச்சதீவுக்கு அண்மையில் வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்திய மீனவர்கள் காணாமல் போனதுடன், மேலும் இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளால் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக விமானம் மூலம் நேற்று (29) நண்பகல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.










