தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து !
[2024-08-27 06:11:31] Views:[13]
எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










