யாழில் மனைவியை அறைக்குள் பூட்டி வைத்து தீயிட்டு எரித்த கணவன் தலைமறைவு..!
[2024-08-26 19:44:34] Views:[10]
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மனைவியை தீயிட்டு எரித்த கணவன் தலைமறைவு, எரிகாயங்களுக்கு உள்ளாகிய மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண்ணே எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தில் பிரச்சினை இடம்பெற்றுவந்துள்ள நிலையில் மது போதையில் கணவன் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதுடன், அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










