யாழில் கோர விபத்து மூவர் படுகாயம்...!!
[2024-08-24 21:16:19] Views:[9]
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கரவெட்டி கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று இரவு பட்டா ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் அவர்களுடடைய இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.










