யாழ் கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது...!!
[2024-08-24 09:39:32] Views:[9]
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஒரு படகில் சட்டவிரோதமாக உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான 11 இந்திய மீனவர்களும் மீன்பிடிக்கப் பயன்படுத்திய படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.










