வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...!!!
[2024-08-22 09:47:43] Views:[9]
அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதி அல்ல. இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்று கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 1,380,000 அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000/= ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம்.
ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம். அவர்களுக்கு மேலும் 3000/= ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனைக் கவனத்திற் கொண்டே உதய ஆர் செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.
அந்த இடைக்கால அறிக்கையில் தற்போதுள்ள அனைத்து வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளும் ஒன்றிணைக்கப்பட்டு 25,000/= ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.










