வித்தியாசமான முறையில் நடைபெற்றசெல்வச்சந்நிதியான் வாள் தூக்குக்காவடி...!!
[2024-08-21 11:30:19] Views:[12]
வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் தேவஸ்தான தீர்த்த திருவிழாவில் வாள் தூக்குக்காவடி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரமேஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் தூக்குக்காவடியே இவ்வாறு பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இரும்பு கேடாரியினால் ஆன சக்கரம் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று கூரிய வாள்களுக்கு மேல் இருந்தவாறு, முதுகிலும் பக்கவாட்டிலும் 12 வாள்களை ஏற்றி வித்தியாசமான முறையில் தனது நேர்த்தி கடனை அவர் நிறைவு செய்துள்ளார்.










