உலகை அச்சுறுத்தும் Mpox நோய்–தயார் நிலையில் இலங்கை அரசு..!!
[2024-08-17 11:47:08] Views:[9]
ஆபிரிக்க நாடுகளில் பரவிய Mpox நோயானது சர்வதேச அளவில் பரவக்கூடிய ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை என விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட 15ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 600 பேர் இறந்துள்ளனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
“மேலும் Mpox எனப்படும் நோய் மனிதர்களுக்கு வைரஸ் குழுவால் ஏற்படும் நோயாகும். பின்னர் முதலில் குரங்குகள் மற்றும் அதைச் சார்ந்த விலங்குகளால் இந்நோய் உண்டாகி, அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்நோய் பரவிய பின், இந்நோய் உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரடியாக நெருங்கிப் பழகுவதால் நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில் Mpox நோயை தடுக்க இலங்கை அரசு தயார் நிலையில் காணப்படுவதா குறிப்பிட்டார்










