நாகப்பட்டினம்–காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
[2024-08-16 10:57:47] Views:[10]
நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 2023.10.14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 2024.10.23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதற்கமைய அன்றைய தினம் காலை 08:00 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12:00 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடையும் என கூறப்படுகிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.










