யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண்....!!
[2024-08-15 11:25:12] Views:[9]
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் தொடர்பான எந்தவிதமான தகவல்களும் இல்லாததால், அவரது சடலம் யாழ் . போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.










