குளவி கொட்டியதில் 70 பேர் வைத்தியசாலையில்: சிகிரியாவில் சம்பவம்...!!
[2024-08-15 10:31:13] Views:[10]
சிகிரியாவில் குளவி கொட்டியதில் சுற்றுலா பயணிகள் 70 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
<>
அவர்களில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இன்று சிகிரியாவை காண பெருமளவான மக்கள் வருகை தந்திருந்த நிலையில், சிங்க பாதத்திற்கு அருகில் குளவி கூடு களைந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
தற்போது, சிகிரியாவுக்குள் நுழைவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென பொலிஸார் அறிவித்துள்ளனர்.










