தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பது தொடர்பான தகவல்..!!!
[2024-08-12 11:10:34] Views:[11]
தனியார் துறை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 17,500/= ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியத்தை 700/= ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்த ஊதியம் 12,500/= ரூபாவாகவும் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 500/= ரூபாவாகவும் உள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










