யாழில் இலங்கை-கனடா வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து..!
[2024-08-10 10:39:16] Views:[10]
நேற்றயதினம் (09) யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இலங்கை-கனடா வர்த்தக சம்மேளனமும் யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம், யாழ்ப்பாண முகாமையாளர் நிறுவணம், யாழ்ப்பாண முகாமைத்துவ கழகம் மற்றும் திருகோணமலை வர்த்தக அமையம் ஆகிய நிறுவனங்கள் குறித்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சாள்ஸ், யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் I.ஜெயசேகரம், இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பிரியந்த சந்திரசேகர உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










