வடக்கு மாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்திய ஜனாதிபதி...!!
[2024-08-03 10:54:07] Views:[9]
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி அனுசரணையில், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் P.S.M.சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
'










