குளவிகொட்டுக்கு இலக்காகிய 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - திருகோணமலையில் சம்பவம்
[2024-07-31 19:19:39] Views:[9]
நேற்று (30) காலை திருகோணமலை கிண்ணியா அல்-அக்சா தேசிய பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாடசாலை வளாகத்தில் குளவி கூடு ஒன்று இருந்ததாகவும் குறித்த குளவி கூடு கலைந்தமையினால் இவ்வாறு மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவி கோட்டுக்கு இலக்கான 21 மாணவர்களும் மற்றும் ஆசிரியர் ஒருவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.










