நெடுந்தீவில் தமிழக கடற்தொழிலாளர்கள் 09 பேர் கைது
[2024-07-23 15:23:38] Views:[9]
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் அவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










