யாழ்.மூளாய் வைத்தியசாலையில் திருட்டு
[2024-07-20 11:14:05] Views:[9]
யாழ். மூளாய் வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு பணியாளர்களின் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழமை போன்று பணியாளர்கள் தமது உடமைகளை பெட்டகத்தினுள் வைத்து பூட்டி விட்டு தமது கடமைகளுக்கு சென்று இருந்தனர். கடமை முடிந்து வந்து பார்த்த வேளை பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணியாளர்களின் இரண்டே கால் பவுண் நகைகள் மற்றும் 55 ஆயிரத்து 500 ரூபாய் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.










