கடலில் குழந்தை பிரசவித்த தாய் - நெடுந்தீவு கடலில்
[2024-07-19 10:38:45] Views:[10]
யாழ்.நெடுந்தீவில் நேற்றுமுன்தினம் (17) பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவருகின்றது. பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு படகில் மருத்துவ அதிகாரி மருத்துவ மாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி அழைத்து வந்துள்ளபோது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தாயையும் சிசுவையும் குறிகாட்டுவான் அழைத்து வந்து, அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளார் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று
அனுமதித்துள்ளதாகவும் தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.










