காலநிலை அறிவிப்பு
[2024-07-15 10:23:20] Views:[9]
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் சில இடங்களில் 50 MM க்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஏனைய பகுதிகளில் காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும்
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவயில் திணைக்களம், பொது மக்களை அறிவுறித்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.










