யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளியின் சடலம் மீட்பு..!
[2024-07-06 11:42:58] Views:[9]
யாழ்ப்பாணம்-வேலணை கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது சுருவில் கடற்கரையில் இன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலனை துறையூர் பகுதியினை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறைபொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
.










