யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த பேருந்து கோர விபத்து - மூவர் பலி...!
[2024-06-26 10:25:29] Views:[9]
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து நேற்று இரவு 11 மணியளவில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக, A9 வீதியில் 228வது km பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன்போது பேருந்தில் பயணித்தவர்கள் இறங்கி, பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த வேளை அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது.
இதன்போதே வீதியில் நின்ற மூவர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
பாரவூர்தி சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான ர் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










