யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறந்து வைப்பு..!
[2024-06-25 19:10:57] Views:[12]
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை இன்று வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சார்ள்ஸ் இன்று திறந்து வைத்துள்ளார்.
இந்த நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M. Charles) இன்று (25) திறந்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாக பயணிக்க கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளை தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.










