யாழ். சங்கானை பிரதேச செயலகம், புலம்பெயர் தேச நிதிப்பங்களிப்பில் மற்றும் இராணுவத்தினரின் உதவிக்கரத்தால் வீடு கையளிப்பு..!!
[2024-06-22 21:37:54] Views:[9]
வலிகாமம் மேற்கு பிரதேச சங்கானை பிரதேச செயலகம் மற்றும் புலம்பெயர் தேசத்தை சேர்ந்த விஸ்வநாதன் கலொக் தபோதரன் நிதிப் பங்களிப்பில் துணவியில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.
நிரந்தர வீடு இன்றி வசித்து வந்த 09 அங்கத்தவர்களை கொண்ட துணவி பகுதியினை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு சங்கானை பிரதேச செயலகத்தினால் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தவரான விஸ்வநாதன் கலொக் தபோதரனால் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கபட்டது.
இந்நிலையில் கிடைக்கபெற்ற நிதிக்கு அமைவாக கூலியின்றி காரைநகர் பிரதேச இராணுவத்தினரின் விசேட மனித வலு பங்களிப்புடன் வீடு கட்டப்பட்டு இன்றைய தினம் பயனாளிகளுக்கு வீடு சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது
இதன் பொழுது இராணுவ அதிகாரிகள், சங்கானை பிரதேச செயளாலர் கவிதா உதயகுமார், புலம்பெயர் நிதிப்பங்களார் தபோதரன், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










