பாகிஸ்தான் இராணுவத்திற்கு கண் கருவிழிகளை தானம் செய்த இலங்கை அரசு..!
[2024-06-20 20:52:13] Views:[10]
பாக்கிஸ்தானுக்கு கண் கருவிழிகளை தானம் செய்துள்ளது இலங்கை.
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட இந்த செயற்பாடானது மீண்டும் தொடங்கியுள்ளது.
நேற்று இரவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாகூருக்கு அனுப்பப்பட்ட கருவிழி நன்கொடையானது பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் பணியாளர்கள் குழுவினால் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகப் பெறப்பட்டது என்று இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் தெரிவித்துள்ளார்.
இலங்கை உலகிற்கு 88,000 க்கும் அதிகமான கண் கருவிழிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது மற்றும் அவற்றில் 36,000 க்கும் அதிகமானவற்றை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
.










