இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு தமிழக மீனவர்கள் கைது...!!
[2024-06-18 10:59:26] Views:[11]
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்கிறது.










