தமிழ் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு: வெளியான வர்த்தமானி அறிவிப்பு..!
[2024-06-16 11:43:59] Views:[13]
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பப் படிவங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.donets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இரவு 09:00 மணிவரைக்குள் மாத்திரமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










