வடக்கில் மேற்கொள்ளப்படும் காடழிப்பை தடுக்க வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விசேட வேலைத்திட்டம்...!
[2024-06-15 10:46:48] Views:[9]
இலங்கையில் இடம்பெறும் காடழிப்பினை கண்காணிப்பதற்கு இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக வனப்பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடு வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுகிறது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வனவளத்திணைக்களத்தின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான சட்டவிரோதமான தேக்குமரங்கள், முதிரைமரங்கள்,பாலைமரங்கள் அறுக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமையால் வளமான இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படகிறது.










